Saturday, July 4, 2009

இத மட்டும் வாசிக்காதீங்க



ஞாபகங்கள்..

ஞாபகங்களை எதிர்பார்த்தேன்...


கதிர் இப்படிதான் இருந்திருப்பார் போல...அதனாலதான் பா.விஜய் இப்படி நடிச்சிருக்கார்.. ( காரணம் சொல்லி தப்பிக்க விஜய்க்கு உதவுமில்ல..)


மீரா சேட்டு பொண்ணு ஆனா நல்லா தமிழ் பேசுது... சேட்டு அப்பா கூட நல்லா தமிழ் பேசுறார்.. தில்லிக்கு போனா அங்க உள்ள வடநாட்டுகாரங்க கூட தமிழ் பேசுறாங்க...இது தமிழ் படம்லே..!


ஜேம்ஸ்விக்... பழையபாடல் ரொம்ப பிடிக்கும் போல...

மீயூசீக் கத்துகோங்க... விஜயை ஏமாத்திட்டிங்க...

அவரும் ஏமாத்திருக்க்கக் கூடாது...


இயக்குனர் ஜீவன் பேருல...மட்டும் இருக்குபோல... படத்துல இல்லை

இந்த கதைய இன்னும் சிறப்பாக விருவிருப்பாக பண்ணிருக்கலாம்

பணம் போடுறவரு நான் இப்படி டான்ஸ் ஆடுவேன்னு சொன்னா நீங்கதான் மாட்டேன் மாட்டேன்னு சொல்லிருக்கணும் - குறிப்பா.... உன்னால் முடியும் பாடல்வ் வரி நல்லா இருந்தும் ஜீவனில்லை ஜீவன்.


முதல் பாடல் தேவையா... யோசிக்கலாம் காலம் இன்னும் இருக்கு...

எல்லோரும் ஆட்டோகிராப் போல இருக்கும் நினைச்சாங்க... தியேட்டரில் ஒரு ஆட்டோ கூட இல்லை ஜீவன்... பா.(வம்)விஜய்

தாய்காவியம் படைப்பார்னு பார்தேன்...


ஒலி..ஓளி அமைப்புகூட... வேணாம் அடுத்த படைப்பில் மார்க் ..



தோல்வி தான் சரித்திரத்தைச்

செதுக்கிறது

தங்கத்தை இரும்பு

செத்துக்குவதைப் போல்.


நிராகரிக்கப்படுகிறாயா?

நில் நிமிர்ந்து.

உனனை வருத்தும் கைகளே

ஒரு நாள் வருந்தும்.


மேலே எறிந்த பந்து

பூமிக்கு வந்தே ஆக வேண்டும்

செய்யப்பட்ட முயற்சி

பலனை அடந்தே தீரும்.


வெற்றிகளின் தாமதத்தால்

வருந்தாதே.

தயிர்

மறுநாளே கிடைக்கிறது.

கரும்பு

ஆறு மாதத்திற்குப் பிறகுதான்

கிடைக்கிறது!


பா.விஜய்







No comments:

Post a Comment